முருகன் அடியவர்களுக்கு அன்பான வேண்டுகோள்!

முருகன் அடியவர்களாகிய தங்களின் பேருதவியினாலும், வங்கியிலிருந்து பெறப்பட்ட 20 மில்லியன் கடனினாலும், ஆலயத்தில் கும்பாபிசேகம் நடாத்துவதற்கு தேவையான பெரும்பகுதி வேலைகள் முடிவடைந்துள்ளது. விநாயகர் துர்க்கை சந்நிதிகளுக்கான சிற்பகற்கள் சென்ற மார்கழியில் இங்கு வந்தடைந்துள்ளன. உட்புற சந்நிதிகளில் முருகன் சந்நிதியின் பெரும்பகுதி கட்டி முடிக்கப்பட்டுளது. இந்திய சிற்பிகளுக்கு விசா நீண்ட தாமததிற்கு பின்னர் 01.03.2022 இல் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் ஒரிரு வாரங்களில் இங்கு வரவுள்ளனர். சில அடியவர்கள் சந்நிதிகள் பலவற்றிற்கு மேலதிக நிதி வழங்கியுள்ளனர். அதே சமயம் மிகுதி வேலைகள் ஆரம்பிக்கபடவுள்ள நிவையில், அடியார்கள் சிலர் தாமாக முன்வந்து உள்சந்நிதிக்கதவுகள், சந்நிதிகளின் விமானத்தின் நான்கு பக்கத்திலும் அமையவிருக்கும் சிலைகள், சந்நிதியின் மேற்பகுதியில் அமையும் வாகன சிலைகள்;, மற்றும் கலசம் என்பவற்றில் சிலவற்றிற்கு உபயமளிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள. ஏனைய அடியார்களையும் இதில் இணைப்பதற்காக, அவற்றை செய்து இங்கு கொண்டுவந்து கடட்டுவதற்கான செலவு விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் கட்டிட குழுவினருடன This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. அல்லது தொலைபேசி 401 44 741 மூலம் தொடர்புகொண்டு தங்கள் விருப்பத்தை அறியத்தரவும். பலர் ஒரே உபயத்தை செய்வதற்கு விருப்பம் தெரிவித்தால், முதலில் ஆலயத்திற்கு நிதியளித்தவர் அல்லது அவரது குடும்பம்(பெற்றோர் பிள்ளைகள் சேர்ந்து) குறைந்தது 25000 நிதியுதவியளித்தவர்கட்கு முன்னுரிமையளிக்கப்படும். அடியவர்க்ள 3 கிழமைகளுக்குள் தங்கள் விருப்பதை அறியத்தரும்படி மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம். அடியவர்கள் 3 கிழமைகளுக்குள் தங்கள் விருப்பதை அறியத்தரும்படி மிக தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

சிலைகள், சந்நிதிகள், பொருட்கள் சந்நிதி

தேவையான
தொகை (kroner)

கலசம்( தற்காலிகமானது) முருகன் 10 000
கலசம் விநாயகர் 10 000
கலசம் பார்வதி 7 000
கலசம் சண்டிகேஸ்வரர் 4 000
கதவு விநாயகர் 50 000
கதவு முருகன் 75 000
சுவாமி சிலைகள் (சந்நிதிகளின் மேல்பகுதியில் விமானத்தின் நான்கு பக்கத்திலும் அமையும் சிலைகள்(4),
ஒரு சிலைக்கான செலவு
விநாயகர் 8 000
எலி சிற்பங்கள், சந்நிதிகளின் நான்கு மூலைகளில் அமையும் வாகனங்கள் (8)
ஒரு வாகனத்திற்கான செலவு
விநாயகர் 1 500
ஆசனக்கல் (பீடக்கல்) விநாயகர் 10 000

சுவாமி சிலைகள் 5 சிலைகள்
(பஞ்ச கோஸ்ட சிலைகள்) ஒரு சிலைக்கான செலவு

முருகன் 15 000
படிக்குரிய சுவர் (vangen) முருகன் 35 000

குறிப்பு: சிலைகளுக்கான நிதி இந்தியாவில் செதுக்கப்பட்ட பின்னர் ஏற்றூக்கொள்ளாப்படும்.

கீழ் தரப்பட்டுள்ள சந்நிதிகளை கட்டிமுடிப்பதற்கு தொடர்ந்தும் நிதி தேவையாகவுள்ளது. இவற்றிற்கு அடியவர்கள் விரும்பிய தொகையை எந்த நேரத்திலும் வழங்கலாம்.

விநாயகர் சந்நிதி 200 000
சண்டிகேஸ்வரர் சந்நிதி 200 000
சிறிய தற்காலிக விமானம் 500 000
மூலஸ்தான உள் வேலைகள் 100 000
வாகன தரிப்பிடத்தில்  கல் பதித்தல் 500 000
வெளி வீதியில் கல் பதித்தல் 500 000
பார்வதி சந்நிதி 80 000

குறிப்பு: சந்நிதிகளுக்கு குழுக்களாகவும் உபயம் வழங்கலாம்


இங்கனம்
கட்டடக்குழு, ஆலய நிர்வாகாம்

புதிய ஆலயத்தின் விநாயகர் அம்மன் சந்நிதிகளின் சிற்பக்கற்கள் தை 2022 முதல் வாரத்தில்; இங்கு வந்தடையும்

In English

சந்நிதிகளை கட்டுவதற்காக சிற்பிகளை தை மாதத்தில் இங்கு அழைப்பதற்கான ஒழுங்குகள் நடைபெறுகிறது. உட்புற சந்நிதிகளில் துர்க்கை, வசந்த மண்டபம், ஆறுமுகசாமி, நடராஜர்இ நவக்கிரகம், சந்தானகோபாலர்/லட்சுமி நாராயணர் ஆகியவற்கும், கொடித்தம்பம், கொடித்தம்பக்கல், மயூரம், பலிபீடம், ஆகியவற்கு முழுமையாக அடியவர்கள் நிதி உதவி வழங்குகிறார்கள்.

பகுதியாக நிதி உதவி வழங்கியுள்ள சந்நிதிகளின் விபரங்களும் மற்றும் அதற்குரிய மேலதிக நிதித்தேவைகளும் கீழே தரப்பட்டுள்ளது. இச்சந்நிதிகள் கும்பாபிசேகத்திற்கு முன்னர் கட்டி முடிக்கப்படவேண்டும். மேலும் தற்போது கப்பலில் கொள்கலன் அனுப்பும் செலவுகள் உலக சந்தையில் பல மடங்காக உயர்ந்துள்ளது. இக்காரணத்தினால் இந்தியாவிலிருந்து சிற்பக்கற்களை இறக்குமதி செய்யும் செலவுகள் அதிகரித்துள்ளது.

 

சந்நிதிகள்

மொத்த செலவு (மதிப்பீடு)

இதுவரை அனுசரணை வழங்கப்பட்ட தொகை

இன்னும் தேவையாகவுள்ள தொகை

 

Vinayagar

650 000

350 000

300 000

விநாயகர் சந்நிதி

Sandigeswar

100 000

35 000

65 000

சன்டேஸ்வரர்

பார்வதி சந்நிதி

350 000

100 000

250 000

Vimanam தற்காலிக

300 000

150 000

150 000

விமானம்(மூலஸ்தானத்தின் மேல் அமையவிருக்கும் கோபுரம்)  

விலையுயர்வுகள் எதிர்பாரத செலவுகளின் தாக்கம்

 

 

500 000

கோஸ்த விக்கிரகங்கள்(9)

 

 

125 000

வெளி வீதியிற்கும் வாகனத்தரிப்பிடத்திற்கும் கல் பதித்தல்

 

 

1 200 000

தேவைப்படும் நிதி

 

 

2 590 000

ஆலய கும்பாபிசேகத்தை 2022 இல் நடாத்துவதற்கு முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். தங்களால் இயன்ற பங்களிப்பை துரிதமாக வழங்கி ஆலய கும்பாபிசேகத்தை சிறப்பாக நடைபெற உதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

சந்நிதியிற்களுக்கான அனுசரணையை குழுக்களாகவும் இணைந்து வழங்கலாம். வெளி வீதியிற்கும் வாகனத்தரிப்பிடத்திற்கும் கல் பதிக்கவேண்டும் என்பது மாநகரசபையினால் விதிக்கப்பட்ட நிபந்தனையாகும் (krav iht. godkjent byggetillatelsen). இதைத்தவிர ஆலய வெளிச்சுவருக்கும் வண்ணம் பூச வேண்டிய செலவுகள் உள்ளது
என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

குறிப்பு: (கோஸ்த விக்கிரகங்கள்: முருகன் சந்நிதியில் வெளிச்சுவரிலும் பிள்ளையார், அம்மன் சந்நிதிகளில் மேல்பகுதியிலும் அலங்காரத்திற்காக வைக்கப்;படும் சிலைகள்).

இங்கனம்
ஆலய கட்டக்குழுஇ நிர்வாகம்;

ஆலய உள் சந்நிதிக்கான சிற்பக்கல்கள் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது

விநாயகர் மற்றும் துர்க்கை சந்நிகள் இந்தியாவில் கருங்கல்லில் செதுக்கப்பட்டு சென்ற வாரம் (06.11.21) இல் கப்பலில் சென்னையிலிருந்து ஒஸ்லோவிற்கு அனுப்பிவைகப்பட்டுள்ள‌து. இவை மார்கழி கடைசியில் ஓஸ்லோ வந்தடையும். இந்தியாவிலிருந்து சிற்பிகளை இங்கு வரவழைப்பதற்கான விசா கோரும் நடவடிக்கைகள் மெற்கொள்ளப்படுகிண்றது என்பதை அடியவர்களுக்கு அறியத்தருகிறோம்.

ஆலய கீழ் மண்டபம் பாவனைக்கு தயாராகவுள்து

புதிய ஆலய கட்டிடத்தில் அமைத்துள்ள மண்டபத்தை பல அடியார்கள் திருமண வைபவம் போன்ற விழாக்களை நடாத்த விரும்புவதாலூம், இதனால் வரும் வருமானத்தை கட்டட நிதியிற்கு பயன்படுத்தலாம் என்பதாலும் மண்டபத்தை பாவனைக்கு விடுவது என சைவப்புலவர் வசந்தன் குருக்கள் மற்றும் அவரின் சகாக்களின் ஆலோசனையுடனும்  ஆலய நிர்வாகமும் கட்டடக்குழுவும் முடிவு செய்து 01.09.21 இல் கிரஹப்பிரவேச நிகழ்வு நடைபெற்றது என மகிழ்ச்சியுடன் தங்களுக்கு அறியத்தருகிறோம். ஆலய கீழ் மண்டபத்திற்கு மட்டும் கிரஹப்பிரவேசம் செய்யப்பட்டது. COVID 19 கட்டுப்பாடுகள் காரணமாக குருமார்கள் ஆலய நிர்வாகம், கட்டிடகுழு, மட்டுமே  இந்நிகழ்வில் பங்கு கொண்டார்கள். இந்நிகழ்வில் இருந்து பிரதமகுரருக்கள் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர்களின் வருகையை 31.08.21 வரை நிச்சயப்படுத்த முடியாமல் இருந்தது. இக்காரணத்தினால் எமது அங்கத்தவர்களுக்கும் அனுசரணையாளர்களுக்கும் உரிய நேரத்தில் அறிவிக்கமுடியாமைக்கு மனம் வருந்துகிறோம். ஆலய மண்டபத்தை அடியவர்கள் மங்களகர நிகழ்வுகளுக்கான பாவனைக்கு பதிவு செய்யலாம். மேலதிக விபரங்களுக்கு ஆல்ய காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளவும். இதில் வரும் வருமானம் நடைமுறை செலவுகளுக்கும் (மின்சாரம், இதர வரிகள்) ஆலய கட்டட நிதியிற்கும் வலுச்சேர்க்கும். அடியவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கமுடியாமல் உள்ள சூழ்நிலைக்கு நாம் மனம் வருந்துகிறோம்.

புதிய ஆலய கட்டடத்தை பார்வையிட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது

புதிய ஆலய கட்டடத்தை பார்வையிட அடியவர்களுக்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். பார்வையிட வர விரும்பும் ஒவ்வொருவரும் கீழேயுள்ள இணைப்பை அழுத்தி முன்கூட்டியே பதிவு செய்யவும்.

COVID19 காரணமாக வரும் அடியவர்களின் பெயர், தொலைபேசி மற்றும் வருகை தரும் நேரத்தை தாங்கள் முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறோம்.

நேரத்தை பதிவு செய்யுங்கள்

முக்கிய குறிப்பு: ஆலயம் Ammerud இல்தான் நடைபெறுகிறது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

இங்கனம்
ஆலய கட்டடக்குழு, ஆலய நிர்வாகம்

 

Dear devotees

We are pleased to announse that  you can now view the new temple building at Karen Platous vei 4., 0988 Oslo. Please follow the  link to choose the day you wish to visit. 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSefnRET7hFTKoWGxDbBYFQ0ciEo4PHdD3XAvEovXgqX0lpUQw/viewform 

NB. Daily temple activities are held in Ammerud. We hope that we can move the deities to the new temple in second quarter 2022

 

Everest விளையாட்டுகழகம் 50000 குரோணர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது

ஆலய கட்டட‌க்குழுவால் தமிழர் விளையாட்டு கழகங்களுக்கு சில மாதங்களுக்கு முன்னர் நிதியுதவி வேண்டி வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இவ்வேண்டுகோளுக்கு செவிமடுத்து Everest கழகம் 50000 குரோணர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. முதன்முதலாக விளையாட்டுகழகங்கள் என்னும் வகையில் நிதியுதவி வழங்கிய கழகம் என்னும் பெருமையை இக்கழகம் பெற்றுள்ளது என்பதை நாம் மிக மகிழ்ச்சியுடன் அடியார்களுக்கு அறியத்தருகிறோம். இவர்களின் செயல் ஒர் முன்னுதாரணமாக திகழும் என நாம் நம்புகிறோம். ஆலயம் சார்பில் கழக நிர்வாகத்திற்கும் அதன் அங்கத்தவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

இங்கனம்
ஆலய கட்டடக்குழு, ஆலய நிர்வாகம்

கும்பாபிஷேகம் நடாத்துவதற்கு செய்துமுடிக்கவேண்டிய வேலைகள்

In English

முருகன் அடியார்களே!

நோர்வேஜிய கட்டட நிறுவனத்தின் வேலைகள் யாவும் முடிவடைந்து புதிய ஆலய கட்டிடத்தை நாம் பொறுப்பேற்றுள்ளோம் என்பதனை தங்களிற்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். உட்புற ஆலய சந்நிதிகள் தவிர மற்றைய சகல வேலைகளும் அழகாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. COVID19 கட்டுப்பாடுகளில் சிறிய தளர்வுகள் நடைமுறைக்கு வந்தபின்னர் உட்பகுதியை அடியார்கள் பார்வையிட ஒழுங்குகள் செய்யப்படும் என்பதனை அறியத்தருகிறோம். அத்துடன் OBOS 31.07.2021 வரை Ammerud இல் ஆலயத்தை தொடர்ந்து நடாத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

கும்பாபிஷேகம் நடாத்துவதற்கு செய்துமுடிக்கவேண்டிய வேலைகள்

2022 முற்பகுதியில் ஆலய கும்பாபிஷேகம் நடாத்தவேண்டும். அதற்கு முன்னர் கட்டாயமாக செய்யப்படவேண்டிய திருப்பணிகள்: விமானம் மற்றும் விநாயகர், துர்க்கை, சிவன், பார்வதி, பைரவர்,சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும், கொடித்தம்பம், கொடித்தம்பக்கல், மயூரம், பலிபீடம் , வெளிச்சுவரிற்கு வண்ணம் தீட்டுதல், முன் படியிற்கு கல்(granittflis/ flis)பதித்தல் ஆகியவையாகும். இத்திட்டத்தில் 18 அடி உயரமான கருங்கல்லில் செதுக்கப்படும் விமானமும் உள்ளடங்கும். இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எமக்கு இன்னும் 6-7 மில்லியன் குரோணர்கள் தேவையாகவுள்ளது.

இத்திருப்பணிகளில் சில சந்நிதிகளிற்கு அடியவர்கள் முழுப்பங்களிப்பையும், சில சந்நிதிகளிற்கு பகுதிப் பங்களிப்பையும் செலுத்தியும் செலுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்கள். இதுவரை பங்களிக்கப்பட்ட மற்றும் பங்களிக்கப்படாத விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. நாம் ஆரம்ப காலத்தில் கும்பாபிஷேகம் செய்வதற்கு மேற்குறிப்பிடப்பட்ட சந்நிதிகளையும் விமானத்தையும் கருங்கல்லில் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். எமது மக்களில் ஒரு பகுதியினர் தற்போதைய (COVID19) சூழ்நிலையால் பொருளாதார பின்னடைவுகளை எதிர்நோக்கியுள்ளனர். அதனால் நாம் குறுகிய காலத்தில் 6-7 மில்லியன் பணத்தை சேர்ப்பது சாத்தியமற்றதாகும். காலத்தின் கட்டாயத்தால் ஆரம்ப திட்டத்தில் சில தற்காலிக மாற்றங்களை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

ஆலய விமானம் திட்டமிட்டபடி 18 அடி உயரமாக, கருங்கல்லில் கட்டுவதற்கு 3-4 மில்லியன் குரோணர்கள் (இத்தொகை மேற்குற்ப்பிட்ட 7 மில்லியனில் அடங்கும்) தேவையாகவுள்து. அதேசமயம் விமானத்திற்குரிய நிதி உடனடியாக திரட்டும் சூழ்நிலையில்லாததால் ஸ்தபதியின் அலோசனைப்படி ஒர் சிறிய தற்காலிக விமானத்தை சீமெந்தினால் செய்து கும்பாபிஷேகத்தை 2022 இல் நடாத்தத் திட்டமிடுள்ளோம். இத்தற்காலிக விமானத்துடன் கும்பாபிஷேகம் செய்வதற்கு எமக்கு தற்போது தேவைப்படும் நிதி 3-4 மில்லியன் குரோணர்களாகும். இத்திட்டத்தில் ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட கருங்கல் விமானத்திற்கு பதிலாக தற்காலிக விமானம் அமைக்கப்படும். மற்றயை வேலைகள் யாவும் ஆரம்பத் திட்டப்படி நிர்மாணிக்கப்படும். தற்போதைய அசாதாரண சூழ்நிலை மாறியபின்னர் அடியவர்களிடம் நிதியைப் பெற்று பின்னர் கருங்கல்லினால் திட்டமிட்டபடி விமானத்தை அமைக்கலாம். ஆலய கட்டிடத்தை பாவனைக்குட்படுத்துவதற்கு (midlertidig brukstillatelse) மாநகரசபைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பம் சார்பாக மாநகரசபை எம்மிடம் சில விளக்கங்களை கேட்டுள்ளார்கள். அக்கேள்விகளானது விமானம், ஆலயகோபுரம், மற்றும் வெளிச் சிற்பவேலைகள் எப்போது நாம் அமைப்போம் என்பதாகும்.

புதிய ஆலயச் சிற்ப வேலைகள் விநாயகர் சந்நிதியும் அம்மன் சந்நிதியும் தை மாதத்திற்குள் செதுக்கப்பட்டு நோர்வேயிற்கு அனுப்பிவைக்கப்படும் என ஸ்தபதி உறுதியளித்துள்ளார். இச்சந்நிதிகள் எதிர்வரும் சித்திரை மாதத்தில் இங்கு வந்தடையும், சிற்பிகளும் அதே நேரத்தில் இங்கு வந்து வேலைகள் ஆரம்பிக்கும் நிலைமை உருவாகும் என நம்புகிறோம்.

குறிப்பு: அம்மன் சந்நிதி, கொடித்தம்பம், தம்பக்கல், பைரவர் மற்றும் ஆறுமுகசாமியின் சந்நிதியிற்கு முழுமையாக நிதி உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இவ்விபரம் மேல் அட்டவணையில் கொடுக்கப்படவில்லை.

ஆலய கும்பாபிசேகத்தை 2022 இல் நடாத்துவதற்கு தங்கள் பங்களிப்பை வேண்டுகிறோம்.
“மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்”

இங்கனம்
ஆலய நிர்வாகம், கட்டடகுழு
நோர்வே இந்து கலாச்சார மன்றம்